tamilnadu

img

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 ஆம்னி பேருந்துகள் தீப்பற்றி சேதம்

சென்னை 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 ஆம்னி பேருந்துகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

கொரோனா பொதுமுடக்கக் அறிவிக்கப்பட்ட பிறகு பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 23 ஆம் தேதி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆம்னி பேருந்தில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.  சற்று நேரத்தில் அதன் அருகிலிருந்து ஆம்னி பேருந்துகளுக்கும் தீ பரவியது. அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். ஆனால், தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே 3 ஆம்னி பேருந்துகள் முழுவதும் எரிந்து நாசமாகின. மேலும், 2 பேருந்துகளில் பற்றியிருந்த தீயை தீயணைப்புத் துறையினர் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர்.

மேலும், தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;