tamilnadu

செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி

சென்னை, மே 30 - சென்னை அரசு பொது மருத்துவமனையில் தலைமைச் செவிலியராகவும், செவிலியர் கண்காணிப்பாளராகவும் பணி யாற்றி வந்தவர் ஜோன் மேரி பிரி சில்லா. கடந்த மார்ச் மாதத்துடன் இவர் ஓய்வுபெற இருந்த நிலை யில், கொரோனா வைரஸ் தடுப்பு  நடவடிக்கைக்காக பணி நீட்டிப்பு  வழங்கப்பட்டது. இந்த மருத்துவ மனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை வார்டை கண்காணிக் கும் பணியில் அவர் இருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான அவருக்கு கடந்த 24ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுதது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பலனின்றி 27-ம் தேதி  இறந்தார். இந்நிலையில், செவிலி யர் குடும்பத்தினருக்கு நிவாரண  தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்  கப்படும் என முதலமைச்சர் எடப்  பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.