tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா....பாதிப்பு எண்ணிக்கை 1500-யை தாண்டியது

சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," தமிழகத்தில் இன்று 43 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து  மீண்டவர்களின் எண்ணிக்கை 411-லிருந்து 457 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக  இன்று ஒரே நாளில் 46 பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது” எனக் கூறினார்.  
 

;