tamilnadu

img

தோழர் சி.கருப்பையா 3ஆம் ஆண்டு நினைவு நாள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் சி.கருப்பையனின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று (ஜூன் 5) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பொழிச்சலூரில் உள்ள தோழர் சி.கருப்பையன் நினைவு இல்லத்தில், அவரது உருவப்படத்திற்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜெயசங்கரன், எம்.தாமு, பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன், சந்திரன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் நயினான், பொழிச்சலூர் கிளைச் செயலாளர் ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.