சென்னை, ஜூலை 27 - சட்டமன்றம், நாடாளுமன்றங் களில் மகளிருக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று எல்ஐசி- யில் பணியாற்றும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்ஐசி உழைக்கும் மகளிர் 27வது மாநாடு சனிக்கிழமையன்று (ஜூலை 27) ராயப்பேட்டையில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், எல்ஐசி-யை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும், 3, 4ஆம் பிரிவு ஊழியர் களை நிரந்தரம் செய்ய வேண்டும்; புதிய நியமனங்களை செய்ய வேண்டும், பாலிசிகள் மற்றும் சேவை கள் மீதான 18 விழுக்காடு ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம், கூட்டுபேர உரிமை வழங்க வேண்டும், பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைக்கும், தனியார்மயமாக்கும் முயற்சிகளை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் பேசினார். மருத்துவர் திலகவதி சிறப்புரையாற்றினார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை கோட்டம் - 1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், மகளிர் குழு அமைப்பாளர் எஸ்.மஞ்சுளா, இணை அமைப்பாளர் எஸ்.ரேச்சல் சர்மிளா உள்ளிட்டோர் பேசினர்.