சென்னை, ஜூலை 28- பழங்குடியினர் நலத்துறைக்கு முறைப்படி மூத்த ஐஏஎஸ் அதி காரியை இயக்குநராக நியமிக்க வேண்டும். பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் இதன்மூலம் 30 ஆயிரம் பழங்குடியின பள்ளி மாணவர்களின் கல்வி பெறும் உரிமையை பாது காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறையானது கடந்த 2000 ஆம் ஆண்டு ஆதிராவிடர் நலத்துறை யிலிருந்து பிரிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு முதல் தனிப்பொறுப்புடன் கூடிய முழு அதிகாரத்துடன் இயங்கி வருகிறது. பழங்குடியி னர் நலத்துறையில் 212 உண்டு உறைவிடத் தொடக்கப்பள்ளிக ளும், 49 உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளிகளும், 31 உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகளும், 28 உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளும் மற்றும் 8 ஏகலைவா மாதிரி மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 328 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 29,774 மாணவ- மாண வியர்கள் கல்வி பயின்று வருகின்ற னர். இந்நிலையில் பழங்குடியினர் நலத்துறையில் 210 இடைநிலை ஆசி ரியர் பணியிடங்களும், 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 49 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 438 பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரந்தரமாக நிரப்பப்படாமல், தற்கா லிகமாகத் தொகுப்பூதியப் பணி நிர வல் மூலம் சமாளிக்கப்பட்டு வந்தன.
ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள்
இந்நிலையில் நடப்பு 2024- 2025 ஆம் கல்வி ஆண்டு தொடங்கி ஏறக் குறைய இரண்டு மாத காலங்கள் முடிவுற்ற நிலையில், மேற் சொல்லப் பட்ட காலிப் பணியிடங்களை கோடை விடுமுறை காலத்திலேயே அவற்றை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிரப்புவ தற்கான நடவடிக்கைகளை எடுக்கா ததின் விளைவாக, இன்றைய தேதி யில் பல பள்ளிகள் ஆசிரியர்களே இல்லாமலும், பெரும்பாலான பள்ளிகள் ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் பள்ளிகளாகவும் இருக்கின்றன. அதனால் இந்தப் பள்ளிகளை நம்பி படிக்கும் பழங்கு டியினத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வி உரிமை கேள்விக்குறியாகி இருக்கின்றது.
300 தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிடுக
இந்நிலையில் கடந்த 7 ஆண்டுக ளாக தொகுப்பூதியத்தில் 300 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களை 2024- 2025 ஆம் கல்வி யாண்டின் தொடக்கத்தில் எந்தவித மான முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நிறுத்தம் செய்யப்பட்டதினை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக பணிநீக்கம் செய்யப் பட்ட 300 தொகுப்பூதிய ஆசிரியர்க ளுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும்.
மேலும் மேற்படி கோரிக்கைக ளானது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் விவேக், சுதாகர், சங்கர சபாபதி ஆகியோ ரின் வழியாக, நாளிதழ் மற்றும் தனி யார் தொலைக்காட்சி ஊடகங்க ளின் வாயிலாக செய்தியாக வெளி யிட்டன. எனவே மேற்படி கூட்ட மைப்பு நிர்வாகிகள் மீது, பழங்குடி யினர் நலத்துறை இயக்குநரின் பரிந்துரையின் பெயரில் ஆதிதிரா விடர் நல இயக்குனர் , தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதிகள் 1973 விதி 17 (ஆ)வின் கீழ் குற்றக் குறிப்பாணை வழங்கியுள்ளார்.
இது மிக வன்மையான கண்ட னத்துக்குரியது. நிர்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனே கைவிட்டு அவர்கள் மீது புனையப்பட்ட குற்ற குறிப்பாணைக ளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும் பழங்குடியினர் நலத் துறைக்கு இயக்குநராக இந்திய ஆட்சிப்பணி அந்தஸ்தில் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது விதி ஆகும். ஆனால் அதற்கு முரணாக, இந்த துறைக்கு எவ்விதத்திலும் பொருத்தம் இல்லாத ஒன்றிய அரசு தொழிலாளர் நலத்துறையிலிருந்து சி. அண்ணாதுரை சிஎல்எஸ் அவர்களை நியமித்திருப்பதே இத்த கைய நிர்வாக பின்னடைவுக்கு கார ணமாகும். மேற்படி அலுவலர் இந்த துறையில் இயக்குனராக பொறுப் பேற்ற பிறகு, கடந்த 07:03:2022 முதல் தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறை நிர்வாகத்தின் மீது பல விமர்சனங்கள் வந்து கொண்டி ருப்பதால் அவரைப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். மாற்றாக ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகா ரியை மேற்படி துறைக்கு இயக்கு நராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.