சென்னை, ஜூலை 3 - இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங் களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்சா சன்ஹிதா மற் றும் பாரதிய சாட்சிய அதினி யம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்களை அறிமுகப் படுத்தி, அவற்றை ஜூலை 1 முதல் ஒன்றிய பாஜக அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சட்டங்களை அரசியல் சட்டத்துக்கு விரோதமான வை என அறிவிக்கக் கோரி, தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதி த்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “நாட்டில் உள்ள 28 மாநி லங்கள், 8 யூனியன் பிரதேசங் களில், ஒன்பது மாநிலங் கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் மட்டும் தான் இந்தி அலுவல் மொழியாக உள்ளன. மொத்த மக்கள் தொகையில், 43.63 விழுக் காடு மக்கள் மட்டுமே இந்தி யை தாய்மொழியாக கொண்டவர்கள் உள்ளனர்.
இதனால், இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தின் படி மக்களவையில் நிறை வேற்றப்பட்ட சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு மொழிகளில் சட்டம் இயற்ற மக்களவைக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்தி யில் பெயரிடப்பட்டுள்ள மூன்று சட்டங்களையும் அர சியல் சட்டத்திற்கு விரோத மானவை என அறிவித்து, ஆங்கிலத்தில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கும் படி ஒன்றிய அரசுக்கு உத்த ரவிட வேண்டும்” என மனு வில் கோரிக்கை விடுத் திருந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதே வன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணை க்கு வந்தது, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், “மூன்று சட்டங்களும் ஆங்கிலத்தில் தான் நிறைவேற்றப்பட்டன. சட்டங்களின் பெயர்கள் கூட ஆங்கில எழுத்துக்களில் தான் இடம் பெற்றுள்ளன” என்றார்.
மேலும், “இந்த சட்டங் கள், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை” என்றும், “யாருடைய அடிப் படை உரிமையும் இதனால் பாதிக்கப்படவில்லை” எனவும் குறிப்பிட்டார். அத்து டன், “சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப் பம்” என்றும், “அதில் நீதி மன்றம் தலையிட முடி யாது” எனவும் கூறினார்.
எனினும், ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக் கில், ஜூலை 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.