கவுன்சில் கூட்டத்தில் நாராயணசாமி வலியுறுத்தல்
புதுச்சேரி, ஜூன் 12- மூன்று மாத இழப்பீட்டுத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட் டத்தில் முதல்வர் நாராயண சாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாரா யணசாமி வலைதள காட்சி மூலம் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: நிதி ஆதாரம் இல்லாத நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் தலைமையில் வெள்ளி யன்று (ஜூன் 12) நடை பெற்றது. அந்த கூட்டத்தில் பிப்ரவரி மாதம் வரை புதுச்சேரி மாநில அரசுக்கு தேவையான இழப்பீட்டை கொடுத்துள்ளீர் கள், மார்ச், ஏப்ரல், மே மாதத்துக்கான நிதியை கொடுக்கவில்லை. இதனால் மாநிலம் வருவாய் இல்லா மல் தத்தளிக்கிறது. வியா பாரிகள் தங்களுடைய வரவு செலவு கணக்கை செலுத்து வற்கான காலம் நீட்டிக்கப் பட்டுள்ளதால், மாநிலம் மிகப்பெரிய அளவில் பாதிக் கப்பட்டுள்ளது. ஆகவே நிதியமைச்சர் உடனடியாக இந்த மூன்று மாதத்திற்கான இழப்பீட்டை சரிசெய்ய வேண்டும். அதற்குத் தேவை யான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இல்லை யென்றால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி யால் புதுவை மாநிலம் பாதிக்கப்படும் என்று வலி யுறுத்திள்ளேன். அவரும் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளனர். இதே கருத்தை பல்வேறு மாநில நிதி அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.