tamilnadu

img

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி உட்பட 3 பதக்கம்

சென்னை, செப். 3 - பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா  ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கங்களை வென்றுள்ளனர்.

பேட்மிண்டனில், காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். திருவள்ளூரை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். 

இவர்கள் மூவருக்கும் முத லமைச்சர் மு.க. ஸ்டாலின், தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் தனித்தனியே வாழ்த்து தெரிவித்துள்ளார். 

“உங்களின் அர்ப்பணிப்பும், நெகிழ்ச்சியும், தளராத மனப்பான்மை யும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. 

நாங்கள் உங்களைப் பற்றி நம்ப முடியாத அளவிற்கு பெருமைப்படு கிறோம்!” என்று துளசிமதியைப் பாராட்டியுள்ள முதல்வர், “உங்கள் மன உறுதி தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. ஜொலித்துக் கொண்டே இருங்கள்!”  என்று  மனிஷா ராமதாஸுக்கு வாழ்த்து களைத் தெரிவித்துள்ளார்.

அதேபோல, “உங்கள் சிறந்த சாதனை உங்கள் மகத்தான திறமை, ஆர்வம் மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறது. நீங்கள் எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்து கிறீர்கள்! மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று நித்யா ஸ்ரீ சிவனுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.