tamilnadu

img

3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்: டாஸ்மாக் அறிவிப்பு....

சென்னை:
அரசின் உத்தரவு காரணமாக இந்த மாதத்தில் மட்டும் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் டி.மோகன், மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 26ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம் மற்றும் 28 ஆம் தேதி (வியாழக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் ஆகிய நாட்களில் மது விற்பனை செய்யக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 15 ஆம் தேதி, 26 ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த ‘பார்’கள் மூடப்பட வேண்டும்.தங்களுடைய மாவட்டங்களில் உள்ள மதுக் கடைகள் மற்றும் ‘பார்’கள் இந்த உத்தரவுகளை மீறாத வகையில் தகுந்த அறிவுரைகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;