tamilnadu

img

3 நாட்களுக்கு அனல் காற்று

சென்னை:

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த மூன்று நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. அதேபோல் பெரும்பாலான மாவட்டங்களில் அனல் காற்று வீசக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.


வட தமிழகத்தை ஒட்டி வங்கக் கடலை ஃபானி புயல் கடந்து சென்ற போது, காற்றிலிருந்த ஈரப்பதத்தை உள்வாங்கிக் கொண்டதே இதற்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையாக 39 டிகிரி செல்சியஸ் பதிவாகும். 

;