3 குற்றவியல் சட்டங்கள், 4 தொழிற்சங்க சட்ட தொகுப்புகள் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசின் பட்ஜெட்டின் வழியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (ஜூலை 24) சென்னையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை பேசினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், தொமுச பொருளாளர் கி.நடராஜன், ஏஐடியுசி பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பேசினர்.