பூவிருந்தவல்லி பொது வியாபாரிகள் சங்கத்தின் 29ஆவது ஆண்டு விழா சங்கத் தலைவர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா தலைமையில் வியாழனன்று (ஆக.15) நடைபெற்றது. செயலாளர் ஜி.சுப்ரமணியம் வரவேற்றார். பொருளாளர் ஜெ.ஸ்ரீதரன் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டினார். இதில் மாநிலப் பொதுச் செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.