tamilnadu

புதிய கொரோனா தொற்றால் மிதமான பாதிப்பு: அமைச்சர் தகவல்

சென்னை, டிச.16 - சிங்கப்பூர் மற்றும் கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா பாதிப்பு மித மான பாதிப்பாகவே இருக்கிறது  என்று அமைச்சர் மா. சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் மழைக்கால மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா தொற்றுக்கு எதி ரான நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் 98 விழுக்காட்டிற் கும் அதிகமானோருக்கு 3  தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் உருமாற்றம் பல வகைகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது”என்றார்.

அறிகுறியாக இருமல், சளி  
சிங்கப்பூரில் பலருக்கு உரு மாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப் பூரில் மருத்துவ பல்கலைக் கழகத்தை தொடர்பு கொண்டு  கேட்டபோது, இதனால் பாதித்த வர்கள் ஒரு சில நாட்களில் சரியாகி விடுகிறார்கள். இருமல், சளி மட்டும் அறிகுறிகளாக உள்ளன என்று கூறினார்கள்.

கேரளாவில்  280 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள சுகாதாரத்துறை யினருடனும் பேசி வருகிறோம். இந்த கொரோனா பாதிப்பு மிதமான பாதிப்பாகவே இருக்கிறது. 3-4 நாட்களில் சரியாகி விடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து இது தொடர்பாக கண்காணித்து வருகிறோம். காய்ச்சல் அதிகம் இருப்பவர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வரு கிறது. பரிசோதனைகள் அதிகரிக் கப்பட்டுள்ளது.

மேலும் மாதிரிகள் பகுப் பாய்வு செய்து எந்த மாதிரியான வகை என்று கண்டறிய அறிவுறு த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக் கைகள் போதுமானதாக இருக்கி றது என்றும் அமைச்சர் தெரி வித்தார்.

ரூபெல்லா தடுப்பூசி
தமிழ்நாட்டில் 3 ஆயிரம் இடங்களில் 8- வது மருத்துவ முகாம்கள் நடைபெற்று வரு கின்றன. கடந்த 7 வாரங்களில் இது வரை 16,516 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன.அனைத்து முகாம்களில் 9 மாதம் முதல் 15 வயதுடைய சிறார்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் மூலம் 7.83 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

முகக்கவசம் அவசியம்
தமிழ்நாட்டில் பருவ காலத் தொற்றுகள் அதிகரித்து வருவ தால் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.