tamilnadu

img

ஒரே நாளில் 27 மானிய கோரிக்கைகள் நிறைவேற்றம்

சென்னை, மார்ச் 24- கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மார்ச் 23ஆம் தேதியோடு முடித்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப் பட்டது.  அதைத் தொடர்ந்து செவ்வா யன்று (மார்ச் 23)  காவல், தீய ணைப்பு, மாநில சட்டமன்றம், வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித், ஓய்வூதியங்கள், பொதுத்துறை, தொழில், வேளாண்மை, மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய், போக்குவரத்து, வணிகவரி, பத்திரப் பதிவு, பால்வளம், ஊரக தொழில், தொழிலாளர் நலன், ஆதிராவிடர், பழங்குடியினர், தமிழ் வளர்ச்சி, கதர் கிராமத் தொழில்கள், இந்து அறநிலையத்துறை உள்பட 27 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளை 15 அமைச்சர்கள் பேரவையில் தாக்கல் செய்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாததால் வெட்டுத் தீர்மானங்கள் முன்மொழி யப்படவில்லை. ஆளும் கட்சி உறுப் பினர்கள் பேசி முடித்ததும் அனைத்து மானியக்கோரிக்கை களும் நிறைவேற்றப் பட்டு அந்தந்த துறைகளுக்கான நிதிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு  ஜூலை 31 ஆம் தேதி காளிமுத்து பேரவைத் தலைவராக இருந்த போது, 11 மானியக் கோரிக்கைகள் ஒரே நாளில் எடுக்கப்பட்டு அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கப் பட்டதே அதிகப்பட்சமாக இருந்தது. இப்போது 27 மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.