திருவள்ளூர், அக். 11- சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த் தேக்கத்தில் இருந்து நீர் திறக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் திறப்பது வழக்கம். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த வாரம் நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 542 கனஅடி நீர்வரத்து உள்ளது. தற்போது 1011 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பேபி கால்வாய் மூலம் 27 கன அடி நீரை சென்னை புழல் ஏரிக்கு அனுப்பிவந்தனர்.. தற்போது இணைப்புக் கால்வாய் மூலமாக வினாடிக்கு 250 கன அடி வீதம் புழல் நீர்தேக்கத்திற்கு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனிசாமி திறந்து வைத்தார். வெள்ளியன்று (அக்.11) வினாடிக்கு 250 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரானது சனிக்கிழமை முதல் படிப்படியாக உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.