சென்னை, ஆக. 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாடு, 2025-ம் ஆண்டு, ஜனவரி 3, 4, 5 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறு கிறது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்ப தாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மத்தியக்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் தில்லியில் நடை பெற்றது. அக்கூட்டத்தில் கட்சியின் கிளை மாநாடுகள் துவங்கி இடைக் கமிட்டி மாநாடுகள், மாவட்டக்குழு மாநாடுகள், மாநில மாநாடுகள் அதனைத் தொடர்ந்து அகில இந்திய மாநாட்டை நடத்துவது என கட்சியின் மத்தியக்குழு முடிவு செய்திருந்தது.
அதன் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு 2025 ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதி களில் விழுப்புரத்தில் நடைபெற உள் ளது. மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ் ணன், மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
செம்படைப் பேரணி
மாநாட்டின் முதல் நாளான ஜனவரி 3 அன்று மாலை விழுப்புரத்தில் பிரம்மாண்டமான செம்படைப் பேரணியும், அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறும்.
2025 ஜனவரி 4, 5 தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், மாநிலச் செயலாளர் வேலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றுவார்.
அதனைத் தொடர்ந்து அறிக்கை யின் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் செய்யப்பட்ட கட்சி யின் தலையீடுகள், நடத்தியுள்ள போராட்டங்கள், அரசியல் நிலைபாடு கள், ஜனநாயகப்பூர்வமாக விவாதிக்கப் பட்டு எதிர்வரும் காலத்திற்கான கடமைகள் வரையறுக்கப்பட உள்ளன.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.