tamilnadu

ஒரே நாளில் 21 ஆயிரம் ஆவணங்கள் பதிவு

சென்னை,ஜன.23- தமிழ்நாட்டில் ஜனவரி 22 ஆம் தேதி மட்டும் 21,004 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் ரூ. 168. 83 கோடி வருவாய் ஈட்ட பட்டுள்ளதாகவும் அரசு  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தை பொங்கலுக்கு பின்வரும் நாட்களில் பதிவுத்துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால், ஜன. 31 வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தர விடப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் திங்களன்று (ஜன. 22)  ஒரே நாளில் மட்டும் 21,004 ஆவணங்கள் பதியப்பட்டு அதன்  மூலம் அரசுக்கு ரூ. 168.83 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சென்னையில் ஜனவரி 22-ல் 137 அடுக்குமாடி குடி யிருப்புகள் பதியப்பட்டு ரூ. 12 கோடி வருவாய் பெறப்பட் டுள்ளது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.