tamilnadu

img

ஒரே நாளில் 2.5 லட்சம் பேர் பயணம்

 சென்னை,ஜன.12- பொங்கல் விடுமுறைக்காக ஒரே நாளில் சென்னையிலிருந்து இரண்டரை லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளதாக அரசு போக்கு வரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கேகே நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து 14 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன் 4 ஆயிரத்து 950 சிறப்பு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. பொங்கலுக்காக 16 ஆயிரத்து 75 பேருந்துகள் இயக்கப்படும் போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 11 ஆம் தேதி இரவு 10 மணி நிலவரப்படி 4 ஆயிரத்து 904 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 95 பயணிகள் வெளியூர் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

;