tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

12 ஆம் வகுப்பில் 2 வகையான வினாத்தாள்கள்
சென்னை,பிப்.10- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம்  தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை  7.25 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார் கள். தேர்வை எவ்வித குழப்பமும் இல்லாமல் நடத்த தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.

குறிப்பாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக வைக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடு கள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது. இதில்  தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை  தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு  அறையிலும் 2 வகையான வினாத்தாள்  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. ஏ, பி என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.  ஆனால் கேள்விகள் வரிசை மாற்றப் பட்டிருக்கும். 

ஒரு தேர்வு மையத்தில் உள்ள மாணவர்க ளுக்கு ஏ, பி என 2 வகையான  வினாத்தாள் வழங்கப்படும். இந்த 2 வகையான வினாத்தாள் வரிசை எண்  மாற்றப்பட்டு இருக்கும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது. இது குறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்ட போது இந்த முறை 15 வருடத்திற்கு முன்பே இருந்து  உள்ளது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படும். தற்போது 2 வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என்றார்.

மோடி ஆட்சிக்கு மக்கள்  பாடம் புகட்டுவார்கள்:  கே.எஸ். அழகிரி

சென்னை,பிப்.10- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

2014 ஆம் ஆண்டு பாஜக சார்பில்  கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றுவோம் என்று கூறி  ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறை வேற்றாமல் ஒன்பதரை ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சாதனைகளை கொச்சைப் படுத்துகிற வகையில் மக்களவையில் உரையாற்றி இருக்கிறார்.

சில குறிப்பிட்ட தொழிலதிபர்களின் சொத்துக் குவிப்பில் பாஜக தேர்தல் நிதி யாக கோடிக்கணக்கான ரூபாய் பத்திரங்கள் மூலம் குவித்து வருகிறது. 

2018 முதல் 2023 வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சி கள் பெற்ற மொத்த நன்கொடை ரூ. 9,200  கோடி. இதில் பாஜக பெற்ற நன்கொடை  மட்டும் ரூ. 5272 கோடி. இது மொத்த நன்கொடையில் 52 விழுக்காடாகும். கடந்த ஒன்பதரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம், விலை வாசி உயர்வு, சீரழிந்த விவசாயிகளின் வாழ்வாதாரம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, மக்களை வதைக்கும் ஜி.எஸ்.டி. என  குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 

மக்கள் விரோத ஆட்சி செய்த பிரதமர் மோடி, மக்களை பிளவு படுத்தி  அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்  என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார்.  கடந்த ஒன்பதரை ஆண்டு கால ஜன நாயக விரோத, பாசிச ஆட்சிக்கும், பொருளாதார பேரழிவுக்கும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.