tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி  முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சென்னை, ஆக. 14- விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்தூர் அருகே மாயத்தேவன் பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவா ரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உதவி வழக்கறிஞர் பணி தேர்வு முறையில் மாற்றம்

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, ஆக. 14 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) செயலாளர் ச. கோபாலசுந்தரராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு பொதுப் பணியில் உள்ள  அரசு உதவி வழக்கறிஞர் (கிரேடு-2) பத விக்கான புதிய தேர்வுத் திட்டம் தேர்வாணை யத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளதாகவும், இந்த  புதிய தேர்வு திட்டத்தின்படி, முதல் நிலைத்  தேர்வில் சட்டம் தொடர்பான ஒரு தாளுடன் கூடுதலாக பொது அறிவுத் தாள் சேர்க்கப் பட்டுள்ளது. அதேபோல், 2-ஆவது கட்டத் தேர்வான மெயின் தேர்வில் ஏற்கெனவே உள்ள  சட்டம் தொடர்பான 4 தாள்களுடன் கூடுத லாக கட்டாயத் தமிழ்மொழி தகுதித் தாள் தேர்வு சேர்க்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள் ளார்.

மேலும், சட்டம் தொடர்பான தாள்களைப் போன்று கட்டாய தமிழ்மொழித் தேர்வும் விரிவாக  விடை அளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த தாளில் தேர்ச்சி பெற்றால் போதும். இதில் பெறும் மதிப்பெண் மெரிட் பட்டியலுக்கு சேர்க்கப் படாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

செப். 2 பொறியியல்  கல்லூரி வகுப்புகள்!

சென்னை, ஆக. 14 - பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப் டம்பர் 2 அன்று துவங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், பி.இ., பி.டெக், பி.பிளான், எம்.எஸ்.சி. (5 ஆண்டுகள்) பாடப்பிரிவுக்கான வகுப்புகளுக்கு, முன்னதாக ஆகஸ்ட் 21  அன்று மாணவர்களுக்கு அறிமுக நிகழ்ச்சி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், முதல் செமஸ்டர் தேர்வு டிசம்பர் 23 அன்று துவங் கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தயார் நிலையில்  எஸ்எஸ்எல்வி-டி3  
கவுண்டவுன் இன்று தொடக்கம்

சென்னை, ஆக. 14- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இஓஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்து ள்ளது.

இந்த செயற்கைக்கோள் சிறிய ரக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து சுதந்திர தினமான ஆக. 15  காலை விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால், அது மாற்றப்பட்டு தற்போது ஆகஸ்ட் 16 காலை 9.17 மணிக்கு விண் ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதனடிப்படையில், ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு முந்தைய இறுதி கட்ட பணியான கவுண்டவுன் வியாழக் கிழமை (ஆக.15) தொடங்க உள்ளது என்று  இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள னர்.

இந்த செயற்கைக்கோள் பூமியை 24  மணி நேரமும் புகைப்படம் எடுத்து கண்காணிக்கும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறி தல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். 

குளிர்பானங்களை  ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை, ஆக.14- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ் குமார், ஜோதிலட்சுமி தம்பதி. இவர்களது மகள் காவியா (6). ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். 

கடந்த ஆகஸ்ட் 10 அன்று அங்குள்ள பெட்டிக் கடையில், ரூ. 10 மதிப்புள்ள குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந் தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுமி குடித்த குளிர்பானத்தில் தயா ரிப்பு தேதி, காலாவதி தேதி போன்ற விவ ரங்கள் அச்சிடப்படாததால், காலாவதி யான குளிர்பானத்தை குடித்ததால் தான் சிறுமி உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பா னங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, மாநில உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட் டுள்ளது.

ஆளுநர் விருந்தில் அதிமுக பங்கேற்பு

சென்னை, ஆக. 14- ஆளுநர் மாளிகையில் ஆகஸ்ட் 15 அன்று மாலை நடைபெறும் தேநீர் விருந் தில் பங்கேற்கும் படி முத லமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், தமிழ்நாட்டுக்கும் மக்கள் நலனுக்கும் விரோத மாக செயல்படும் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.

ஆனால், ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் அமைப்புச் செய லாளர்கள் டி. ஜெயக்குமார், பா.பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.