சென்னை, மார்ச் 3- தமிழகம் முழுவதும் மாணவர்களை அரசுப் பள்ளி களில் சேர்ப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாண வர் சேர்க்கை இயக்கத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மார்ச் 1 அன்று தொடங்கிவைத்தார்.
அதன்மூலம் கடந்த 1 ஆம் தேதி முதல் அரசு பள்ளி களில் 2024-2025-ஆம் கல்வி யாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் களை சேர்ப்பதற்காக பள்ளி களை சுற்றியுள்ள குடி யிருப்பு பகுதிகளில் வசிக் கும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை மையமாக வைத்து இந்த பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழகம் முழு வதும் கடந்த 2 நாட்களில் மட்டும் 3.31 லட்சம் மாண வர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். சேலம் மற் றும் மதுரையில் அரசு பள்ளி களில் சேர அதிகம் பேர் ஆர் வம் காட்டினார்கள்.
இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளி லும் 19,242 மாணவர்கள் சேர்ந்து சாதனை படைத்துள் ளனர். இதையடுத்து மதுரை யில் 18,127 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். திண்டுக்கல்லில் 17,036 மாணவர்களும், திருவள்ளூ ரில் 15,207 மாணவர்களும், திருவண்ணாமலையில் 13,679 மாணவர்களும், திருப் பூரில் 13,204 மாணவர்களும் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர். சென்னை யை பொறுத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளி களில் சேர்ந்துள்ளனர். சென்னை மாதவரத்தில் 1,568 மாணவர்களும், சிந்தா திரிப்பேட்டையில் 1,058 மாணவர்களும், ஆலந்தூ ரில் 1,220 மாணவர்களும், ராயபுரத்தில் 1,298 மாண வர்களும் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.