சென்னை, ஏப்.29- தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலி யாக இருக்கும் 2 ஆயிரத்து 329 காலிப் பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடி யும். இந்த இணையதளத்தில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் விவரம் மற்றும் எண்ணிக்கை, கல்வித் தகுதிகள், முன்னுரிமைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு தனித்தனி அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பப்படி ஏதாவது ஒரு மாவட்டத்தில் தங்களுக்கு ஏற்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒரே விதமான பதவிக் கான பொது எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய் மொழி தேர்வு ஆகியவை அந் தந்த மாவட்டங்கள் அல்லது வேறு இடங்களில் ஒரே நாளில் நடைபெறும்.
எனவே விண் ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்பு, மற்றொரு மாவட்டத்தில் நடைபெறும் தேர்வில் பங் கேற்பதற்கு மாற்றம் செய்ய முடியாது. அதேபோல் தேர்வு செய்யப்படுபவர்கள் விண்ணப் பித்த மாவட்டத்திலேயே தங்கி பணி செய்ய வேண்டும். எனவே விண்ணப்பதாரர்கள் மிக கவ னமாக மாவட்டங்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.
காலி இடங்களின் எண் ணிக்கை விவரம் வருமாறு:- நகல் பரிசோதகர் - 60 பணி யிடங்கள், நகல் வாசிப்பாளர் - 11, முதுநிலை கட்டளை நிறை வேற்றுநர் - 100, இளநிலை கட் டளை நிறைவேற்றுநர் - 242, கட்டளை எழுத்தர் - 1, ஒளிப்பட நகல் எடுப்பவர் - 53, டிரை வர்கள் - 27, நகல் பிரிவு உதவி யாளர் - 16, அலுவலக உதவியா ளர் - 638, தூய்மைப் பணியாளர் - 202, தோட்ட பணியாளர் - 12, காவலர் - 459, இரவு காவலர் மற் றும் மசால்ஜி - 85, காவலர் மற் றும் மசால்ஜி - 18, தூய்மை பணி யாளர் மற்றும் மசால்ஜி- 1, வாட்டர் ஆண் - வாட்டர் பெண் - 2, மசால்ஜி - 402 ஆகும். இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் நடத்தப்படும். நேர்மையற்ற முறையில் வேலை வாங்கித்தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றும் மோசடியாளர்கள் மற்றும் தரகர்களிடம் இருந்து விண்ணப்பதாரர்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க மே 27 கடைசி நாளாகும். தேர்வு கட்டணத்தை மே 29-ஆம் தேதிக் குள் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.