தமிழ்நாடு அரசு அலுவலகங்க ளில் உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவுகளில் 2 ஆயிரத்து 327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகிருக்கிறது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப் பங்களை நிரப்பும் பணி தொடங்கி விட்டது. விண்ணப்பங்களை நிரப்பு வதற்கான கடைசித் தேதி ஜூலை 19 ஆகும். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என்று இரண்டு கட்டங்களாகத் தேர்வு நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வு செப்டம் பர் 14 ஆம் தேதியன்று நடைபெற வுள்ளது. இந்தத் தேர்வின் முடிவுகள் வெளியாகும் சமயத்தில் முதன்மைத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்.
குரூப் 2 பிரிவில் 502 பணியிடங்க ளும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணி யிடங்களும் நிரப்பப்படவுள்ளன. ஒவ்வொரு பணியிடத்திற்கும் வயது வரம்பு தனியாகத் தரப்பட்டிருக்கி றது. குரூப் 2 பிரிவில் உதவி வணிக வரி அலுவலர் மற்றும் வன அலுவலர் ஆகிய இரண்டிற்கும் பொதுப்பிரிவி னருக்கு அதிகபட்சமாக 32 மற்றும் 34 என்றும், இட ஒதுக்கீட்டுப் பிரி வினருக்கு அதிகபட்சமாக 37 மற்றும் 39 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பணியிடங்களின் எண்ணிக்கை 450 ஆகும். இதைத் தவிர குரூப் 2 பிரிவில் உள்ள எஞ் சிய 57 பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
குரூப் 2ஏ பிரிவில் பொதுப்பிரி வினருக்கு குறைந்தபட்சமாக 18 வயது என்றும், அதிகபட்சமாக 32 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டி ருக்கிறது. முழு நேர இருப்பிடக் காப்பாளர் பணியிடத்திற்கு மட்டும் அதிகபட்ச வயது 52 ஆகும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு இல்லை.
ஒவ்வொரு பணியிடத்திற்கும் கல்வித்தகுதியும் தனித்தனியாக வரையறுக்கப்பட்டுள்ளது. அவரவர் படிப்புக்கேற்ற பணியிடங்கள் எது என்பதை அறிவிக்கையைப் படிப்ப தன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில் குரூப் 2 பிரிவில் உள்ள உதவி வணிகவரி அலுவலர் பணியிடத் திற்கு பி.ஏ, பி.எஸ்சி மற்றும் பி.காம் பட்டதாரியாக இருக்க வேண்டும். இதில் மட்டுமே 336 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
கடந்த தேர்வு வரையில் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய இரண்டிற்குமே ஒரேமாதிரியான முதல்நிலைத் தேர் வும், முதன்மைத் தேர்வும் நடத்தப் பட்டு வந்தன. குரூப் 2க்கு மட்டும் நேர் முகத் தேர்வு இருந்தது. தற்போது இரண்டுக்கும் ஒரே முதல்நிலைத் தேர்வு இருக்கும். ஆனால், முதன் மைத் தேர்வு வெவ்வேறு தன்மை யில் இருக்கும். இது அறிவிக்கை யில் விரிவாகத் தரப்பட்டிருக்கிறது.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்
• தேர்வு அட்டவணை முதலில் வெளியானபோது குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளின் முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 28 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முன்கூட்டியே அதாவது, செப்டம் பர் 14 அன்றே நடைபெறவுள் ளது.
• பாடத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைத் தேர்வர்கள் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். அறிவிக்கையை முழுமையாக வாசிப் பது அவசியமாகும.
• தமிழ்வழிக் கல்வி பயின்றவர் அதற்கான உரிய சான்றிதழைப் பெற வேண்டும். பள்ளிப்படிப்பை வெவ்வேறு பள்ளிகளில் மேற் கொண்டிருந்தால், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் பயின்ற காலத்திற்கான சான்றிதழைப் பெறுதல் அவசியமாகும்.
• ஏதேனும் சந்தேகங்கள் இருந் தால், கட்டணமில்லா அழைப்பு எண் 1800 419 0958ஐத் தொடர்பு கொள்ளலாம்.
• தேர்வு தொடர்பாக ஏராளமான அம்சங்கள் அறிவிக்கையில் தரப்பட்டுள்ளதால், அதை முழுமையாக வாசித்துக் கொள்ள வேண்டும்.