சென்னை, ஆக. 11- ஜி.எஸ்.டி. வரிக்கான ரசீதுகளை போலியாக தயாரித்து ரூ.182 கோடி மோசடி செய்தது தொடர்பாக வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு தனியார் வங்கியின் முன்னாள் உதவி துணை தலைவர் ஏ.திவாகர் மற்றும் ஜான் லிவிங்ஸ்டன் ஆகியோர் இணைந்து ஜிஎஸ்டி வரிச்சலுகை பெறுவதற்காக, போலி நிறுவனங் களை உருவாக்கி அதன் பெயரில், ரசீதுகள் தயா ரித்து வழங்கி உள்ளனர். இதற்காக தொடர் பில்லாத பல்வேறு நபர்களின் பான் கார்டுகளை பயன்படுத்தி, ஜிஎஸ்டி எண் பெற்றுள்ளனர். உண்மையான பொருட்களை வினியோகம் செய்யாமல், போலி ரசீது தயாரித்து, உள்ளட்டு வரி சலுகை பெற முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களின் வீடு, அலுவலகம் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ஏராளமான ஆவணங் கள் சிக்கி உள்ளன. அவர்களிடம் நடத்திய விசார ணையில் போலியாக 20 நிறுவனங்களை உரு வாக்கியதும், அதன் வாயிலாக 315 போலி நிறுவ னங்களுக்கு, விற்பனை செய்ததற்கான போலி ரசீதுகள் தயாரித்ததும் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் ரூ.182 கோடிக்கு போலி ரசீதுகள் உருவாக்கப்பட்டு ரூ.33 கோடிக்கு உள்ளட்டு வரிச் சலுகை பெற்றதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக திவாகர் மற்றும் ஜான் லிவிங்ஸ்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.