சென்னை,அக்டோபர்.07- மெரினா கடற்கரையிலிருந்து 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நேற்று சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
இதனால் அங்கு அதிகளாவில் குப்பை சேர்ந்திருந்தது, மொத்தம 18.5 டன் குப்பைகளை அகற்றியதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. போடப்பட்ட குப்பைகளை 128 தூய்மை பணியாளர்கள், 30க்கும் மேற்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் இணைந்து அகற்றியுள்ளனர்.