சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில், கோவிட்-19 தொற்று காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 62,087 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 37 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 794 பேர் உள்ளது. 34,112 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 1,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 22 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 12 பேர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், சென்னையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,752 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 623 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 109 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 5,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 84 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 5,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 89 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 4,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 51 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 4,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 57 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 3,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 76 பேர் உயிரிழந்துள்ளனர்.