tamilnadu

img

தமிழகத்தில் இன்று 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,652  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,99,255 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,686 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,859 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,45,178 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 19,391 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் இன்று புதிதாக 34,457 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

;