tamilnadu

img

கவரைப்பேட்டை ரயில் விபத்து - 13 பேருக்கு சம்மன்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதிய நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம், உயிரிழப்பு ஏற்படவில்லை. விபத்தில் 13 பெட்டிகள் தடம்புரண்டது, 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. 
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடந்த உயர்மட்ட குழு அமைத்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கவரைப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மோட்டர் மேன், கவரைப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி உட்பட 13 பேர் இன்று மாலை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.