tamilnadu

img

12 ஆம் வகுப்பு மதிப்பெண்.. கணக்கீட்டு முறை அறிவிப்பு...

சென்னை:
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்துசனிக்கிழமையன்று (ஜூன் 26) மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

10, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில்பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட் டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக் கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழுபரிந்துரைத்துள்ளது. 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும்செய்முறைத் தேர்வு (20), அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண்முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண்30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெறஇயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில்பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புசெய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு எழுத்துத்தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ, அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு, 35 விழுக்காடு மதிப்பெண் வழங்குகிறது.11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித்தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு, உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31 ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக் கப்படும்.தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்றுப்பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் விளக்கம்
முதலமைச்சரின் அறிவிப்பு பின்னர், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  “பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு 12 முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அதிலிருந்து 2 முறைகள் தற்போது எடுத்துக் கொள்ளப் பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.தனித்தேர்வர்களுக்கு கொரோனா பரவல் குறைந்து நிலைமை சீரடைந்ததும் தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும்
பெருந்தொற்று இல்லாத நேரத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வு நடத்தப்பட்டிருப்பதால், அதிலிருந்து 50 சதவீதம் மதிப்பெண்கள் கணக்கில்எடுத்துக் கொள்ளப்படுகிறது. கிராமப்புற மாணவர் உள்பட அனைவரையும் திருப்திப்படுத்த ஏதுவாக கணக்கீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

;