சென்னை, ஆக.8- சென்னையில் 3 தளங்களுடன் 115 அடி ஆழத்தில் அமைய உள்ள மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் காண்போரை கவர்கிறது.
சென்னையில் ரூ.63ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 116 கிமீ தொலை வுக்கு 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து பகுதிகளிலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மயிலாப்பூரில் கட்டப்படும் மெட்ரோ நிலையம், மற்ற நிலையங்களை காட்டிலும் ஆழமாகவும் பரந்த பொது தளத்தோடும் உருவாகி வரு கிறது. பொது தளம், வணிக வளாகம், மேல் நடைமேடை, கீழ் நடைமேடை என 4 நிலைகளுடன் தரைக்கு கீழே 115 அடி ஆழத்தில் இந்த நிலையம் அமைய உள்ளது.
அதில், முதல் தளத்தில் (தரையி லிருந்து 55 அடி ஆழத்தில்) மாதவரம் - சிறுசேரி சிப்காட் செல்லும் மேல்தளப் பாதை ரயில்களும், 2ம் தளத்தில் (78 அடியில்) கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி செல்லும் ரயில்களும், 3ம் தளத்தில் (115 அடியில்) மாதவரம்-சிப்காட் செல்லும் கீழ்ப்பாதை ரயில் களும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
மயிலாப்பூரில் நிலத்தின் பரப்பு குறுகியதாக இருப்பதால் அதற் கேற்ப தளங்கள் அமைக்க வேண்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர். சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும் மயிலாப்பூர்வழியாக செல்வதால் மெட்ரோ ரயில் நிலை யம் அமைந்த பின்னர் சென்னை யில் முக்கியமான ரயில் சந்திப்பு நிலை யமாக மயிலாப்பூர் உருவாகும். மேலும் ராயப்பேட்டை- மந்தை வெளி கவுடியா மடம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் மயிலாப்பூர்,மந்தைவெளி வாசிகள் இங்கிருந்து நகரின் முக்கியமான பகுதிகளுக்கும் வடமற்றும் மத்திய சென்னை பகுதி களுக்கும் எளிதாகவும் துரிதமாக வும் சென்றுவரமுடியும். எனவே மயிலாப்பூர் வாசிகள் மெட்ரோ ரயில நிலையப்பணிகள் எப்போது முடியும் என மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.