சென்னை, ஜூன் 11- சென்னை ஓமந்தூரார் அரசு பன் னோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் துவங்கப் பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதற்கான முதலாம் ஆண்டு நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷ் ஆகி யோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த மையத் தில் 10 ஆயிரம் பேர் முழு உடல் பரி சோதனை செய்து கொண்டதாகவும், இதன் மூலம் அரசு ரூ. 2.5 கோடி வரு மானம் ஈட்டி உள்ளதாகவும் கூறினார்.