சென்னை, ஆக. 27 - தமிழ்நாட்டில் 1,064 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு உள்ள தாகவும் 1,796 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் போக்கு வரத்து துறை விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 2022-23 ஆம் நிதி யாண்டில் 1,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ. 420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 833 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் மீதமுள்ள 167 பேருந்துகள், வரும் நவம்பர் மாதத்திற் குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
அதேபோல் 1,000 பழைய பேருந்து களை புதுப்பிக்க ரூ. 154 கோடி ஒதுக்கப்பட்டு, 910 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தொடர்ந்து 2023-24 ஆம் நிதி யாண்டில் 1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்ய ரூ. 446.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 888 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 112 பேருந்துகள் நவம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும். மேலும், 500 பழைய பேருந்து களை புதுப்பிக்க ரூ. 76.34 கோடி ஒதுக்கப்பட்டு 154 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதையடுத்து 2024-25 ஆம் நிதியாண்டில் 3,000 பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 1,535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 503 பேருந்துகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரி ஆணை வழங்கப்பட்டு, வரும் நவம்பர் மாதத் திற்குள் பணி நிறைவடைந்து பயன் பாட்டுக்கு வரவுள்ளன. இவ்வாறு போக்குவரத்துத் துறை தெரிவித்துள் ளது.