tamilnadu

img

தெற்கு தேய்ந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் மையம் வடக்கில் இருக்கிறது!

சென்னை, பிப். 21 - “தெற்கு தேய்ந்தால் பரவா யில்லை என்று நினைக்கும் மையம் வடக்கில் உள்ளது” என்று ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார். மக்கள் நீதி மய்யத்தின் ஏழாம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு சென்னை ஆழ் வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் உரையாற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது: நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை. சோகத்தில் வந்தவன். என் மக்களுக்கு இப்படி நடக்க லாமா; ஏன் இப்படி சென்றுகொண்டிருக்கிறது? என்கிற கேள்வியுடன் அரசியலுக்கு வந்தவன். இன்றைக்கு முக்கியமாக தேசத்தின் குடியுரிமை  என்கிற விஷயமே ஆட்டம் கண்டு கொண்டிருக்கும்போது கட்சி எல்லாம் இரண்டாம் பட்சம்தான். தேசம் தான்  முதலில். இரண்டாவது எனது தமிழ்நாடு. அதன்பின்னரே மொழி. விவசாயிகளுக்கு இன்றைக்கு தமிழகம் செய்தி ருக்க கூடிய விஷயத்தில் 10 சதவிகிதம் கூட ஒன்றியம் செய்யவில்லை.

இன்னும் சொல்லப்போனால், நாட்டை படையெடுத்து  வரும் எதிரிப்படைக்கு என்னென்ன வரவேற்பு கிடைக் குமோ அத்தனையும் தில்லியில் விவசாயிகளுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது. தில்லியில் விவசாயிகளை தடுக்க ஆணிப் படுக்கை போடுகிறார்கள். அதேநேரம், இங்கு நாம் விவசாயிகளை மதிக்கிறோம். இந்த வித்தியா சம் அண்ணா காலத்தில் இருந்து தெள்ளத் தெளிவாகி றது. தெற்கு தேய்ந்தால் பரவாயில்லை என்று நினைக்கக்  கூடிய மையம் அங்கு இருக்கிறது.

அது தவறு. நாம் செய்த  நன்மைக்காக, தேசத் தொண்டுக்காக இன்று தண்டிக்கப் படுகிறோம். தொகுதி வரையறை என்று எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள். தேசத்தின் நன்மைக்கென குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களை கடைப்பிடித்த தேசப்பற்றுக்காக நாம் குரல் கொடுக்க முடியாத மாதிரி தண்டனை கொடுக்கிறார்கள். வருவாய் எந்த மாநிலத்தில் இருந்து கிடைக்கிறது என்று ஒன்றிய அரசு கணக்கெடுத்தால் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இருக்கும்.

நாம் கொடுக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசாதான் திரும்ப கிடைக்கி றது. ஆனால், உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்க ளுக்கு 4 ரூபாய் திரும்ப கிடைக்கிறது. பீகாரி இருப்பது எனது தம்பிதான். அவர்களும் நன்றாக இருக்கட்டும். ஆனால், என் சிற்றுண்டிதான் அவனுக்கான தின்பண்டமாக  இருக்கக்கூடாது. எல்லோருக்கும் சமமான உரிமை இருக்க  வேண்டும்”. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.