tamilnadu

img

உள்ளாட்சி அமைப்புகளை ஆளும் அதிமுக சீரழிக்கிறது கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு:
உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கையில் அதிகாரத்தை ஒப்படைக்காமல் ஆளும் அதிமுக தங்கள் இஷ்டம்போல் செயல்பட்சீரழிக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டி னார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான மறைந்த தோழர் தே.லட்சுமணன் அவர்களின் படத்திறப்பு விழாவிற்கு வருகை தந்த கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் நடந்த பனிப் போரில், மூழ்கப் போகும் அதிமுக என்ற கப்பலுக்கு  எடப்பாடி பழனிசாமியை அறிவித்திருப்பது உலகின் பத்தாவது அதிசயமாகும். தமிழகத்தை அலங்கோலமாக சீரழித்த அதிமுகவினர், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கையில் அதிகாரத்தை ஒப்படைக்காமல் தங்கள் இஷ்டம் போல் விளையாடி வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

முதல்வர் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்?

மேலும் கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 14-வது நிதிக்குழு நிதியில் ரூ. 2,500 கோடியை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு தெரியாமல் சாலை மேம்பாட்டிற்கு ஒப்பந்தம் விட்டதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதற்கு அந்த துறையின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் . இந்த விவகாரத்தில் முதலமைச்சர் வாய்மூடி மவுனியாக இருப்பதுஏன்? என்று கேள்வி எழுப்பினார்.திமுகவுடன் பாஜக கூட்டணி என்று பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது குறித்து செய்தியளர்கள் கேட்டதற்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தமட்டில் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்யும் என்று கூறினார்.

மத்திய பாஜக, மாநில அதிமுகவை எதிர்த்து தமிழகத்தில் போராடி வரும் வலுவான அணியோடு நாங்கள் இருப்போம். திமுக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள்ஒருங்கிணைந்து போராட்டத்தை நடத்தி வருகின்றோம்.  பாஜகவை எதிர்த்து திமுகவும் கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறது.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.