செங்கல்பட்டு, ஏப்.14-
செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா உறுதியாகி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மாநிலத்தில் கொரானா அதிகம் பாதித்த மாவட்டங் களில் செங்கல்பட்டு மாவட்டம் 6வது இடத்தை பிடித்து சிவப்பு பட்டியலில் உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாடாதபடி ஆங்காங்கே சீல் வைக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று அதிகரிப்பை தடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில் முதல் கட்டமாக ரூ. 2.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாகளுக்கு தலா ரூ.1.25 லட்சமும், மறைமலைநகர், செங்கல்பட்டு, மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளுக்கு தலா ரூ. 3.5 லட்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம், இடைக்கழி நாடு, நந்திவரம் கூடுவாஞ் சேரி, திருப்போரூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், திருநீர்மலை, கருங்குழி, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், அச்சிறுப்பாக்கம் உள்பட 12 பேரூராட்சிகளுக்கு தலா ரூ.2.5 லட்சம் ஒதுக்கியுள்ளனர்.
மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், காட்டாங்கொளத்தூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், புனித தோமையர் மலை உள்பட 8 வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தலா ரூ?.2 லட்சம் என ரூ.1 கோடி முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியை அந்தந்த பகுதிகளில் கொரானா தடுப்பு நடவடிக்கை, பாதுகாப்பு கவசம் வாங்குவது, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் அச்சடிப்பது, கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு, பாதுகாக்கப்பட்ட மண்டலம் அமைக்க உரிய பேரிடர் தடுப்பு பொருட்கள் (பேரிகார்டு) வாங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக கொரானாவை தடுக்க தேவைப்படும் நிதியை, அந்தந்த பேரூராட்சி, நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.