செங்கல்பட்டு, நவ. 29- தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது. இதன் தொடக்க விழா வெண்பாக் கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடை பெற்றது. தமிழக முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை இந்த புதிய மாவட்டத்தை தொடக்கி வைத்தார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக் கல் நாட்டியும், அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி னார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை யில் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வரு வாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யர் பா.பொன்னையா ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் ஆட்சியரான ஏ.ஜான் லூயிஸ், அரசு உயர் அதி காரிகள் உட்பட பலரும் பங் கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டத் தில் தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் என 3 வரு வாய் கோட்டங்கள் இடம் பெற்றுள்ளது. செங்கல் பட்டு, தாம்பரம், பல்லாவ ரம், திருப்போரூர், மதுராந்த கம், செய்யூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்ட லூர் ஆகிய தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெறுகின்றன.