tamilnadu

img

கொரோனா சோர்வடையவில்லை - டெட்ராஸ்அதானெம் 

உலகம் சோர்வடைந்தாலும் கொரோனா சோர்வடையவில்லை என உலக சுகாதார இயக்குநர் டெட்ராஸ் அதானெம் தெரிவித்துள்ளார். 
உலக சுகாதார இயக்குநர் டெட்ராஸ் அதானெம் கொரோனா தொற்று வழிகாட்டுதலின் படி தற்போது தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதானெம் நாம் கோவிட் 19 உடன் சோர்வடைந்து இருக்கலாம். ஆனால் அது நம்மிடம் சோர்வாகவில்லை. கொரோனா தம்மைவிட பலவீனமானவர்களை வேட்டையாடுகிறது. ஆனால் இது மற்ற பிரிவுகளையும் பாதிக்கிறது. வறுமை, பசி, காலநிலை மாற்றம்  மற்றும் சமத்துவமின்மைக்கு தடுப்பூசி எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.