tamilnadu

img

சிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்ட துருக்கி

அங்காரா, அக்.18- குர்து ஆயுதப்படை பின்வாங்கு வதற்கு உதவும் வகையில், சிரியா வின் வடக்கு பகுதியில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புக் கொண்டுள்ளது. அங்காராவில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸூம், துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவானும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.  இதன்படி ஐந்து நாட்கள் சண்டை நிறுத்தம் செய்யப்படும்.  இந்நேரத்தில் துருக்கி எல்லை யில் அமைப்பதாக கூறும் “பாதுகாப்பு மண்டலம்” என்கிற பகுதியில் இருந்து குர்துக்கள் தலைமையிலான துருப்புகளை பின்வாங்கு வதற்கு அமெரிக்கா உதவும். இந்த ஒப்பந்தத் திற்கு குர்து ஒய்பிஜி அமைப்பு கட்டுப் பட்டு நடக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சண்டை மிகவும் தீவிரமாக நடை பெற்று வரும் எல்லை நகரங்களான ராஸ் அல்-அயின் மற்றும் டால் அப்யா ட்டுக்கு இடையிலான பகுதியில் குர்துக் களின் தலைமையிலான துருப்புகள் இந்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கும் என்று தளபதி மஷ்லௌம் கோபானி கூறியுள்ளார். “பிற இடங்களின் நிலைமைகள் பற்றி நாங்கள் கலந்துரையாடவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும் மோதல்கள்

இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும் ராஸ் அல்-அயி னில் மோதல்கள் தொடர்ந்து நடை பெற்று வருவதாக பிரிட்டனை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் சிரிய  மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது. கடந்த  எட்டு நாட்களில், சிரியாவில் மட்டும் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்று லட்சத்திற்கு மேலானோர் இடம்பெயர்ந்துள்ள தாகவும் இது கூறியுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ட்விட்டர் பதிவில் கூறியிருக் கிறார்.