tamilnadu

img

பாம்புகளிடம் இருந்து கரோனா வைரஸ் பரவி இருக்கலாம் - சீன விஞ்ஞானிகள் தகவல்

பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு கரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்றை சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கரோனா வைரஸின் பாதிப்பு சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சுவாச மண்டலத்தில் கோளாறுகள், கடும் காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய இந்த கரோனா வைரஸால், இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 550க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு கரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்றை சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் பெக்கிங் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், ஜர்னல் ஆப் மெடிக்கல் வைராலாஜி என்ற இதழில் இது குறித்த ஆய்வு தகவல்கள் வெளியிட்டுள்ளனர். அதில், " சீனாவை தற்போது அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலேயே வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிவிட்டது. இந்த புதிய வைரஸ், மனிதர்களைப் பாதித்தவுடன் செல்களைத் தாக்கி, பலவீனப்படுத்தி பிற தொற்று நோய்களை எளிதாகக் கொண்டுவந்துவிடுகின்றன.

பல்வேறுவிதமான வாழிடங்களில் இருக்கும் கரோனா வைரஸ்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வவ்வால்களில் இருந்து வந்தவை என்றும், மற்றொரு அறிந்து கொள்ள முடியாத இடத்திலிருந்து வந்தவை என்றும் ஆய்வில் தெரிகிறது. இந்த வைரஸின் தன்மையை உறுதியாகத் தீர்மானிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அந்த வைரஸின் மூலக்கூறுகள் குறுக்கும் நெடுக்குமாக இருப்பதால் இதைப் புரிந்து கொள்வதிலும் சிக்கல் நிலவுகிறது. 

மேலும், இந்த கரோனா வைரஸ், பாம்புகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்பதற்கான அதிகமான சான்றுகள் கிடைத்துள்ளன. பாம்புகளின் உடலில் இருக்கும் செல்களும், இந்த வைரஸில் உள்ள செல்களுக்கும் அதிகமான ஒற்றுமை இருக்கின்றன. இதனால், இந்த வைரஸ் பாம்பின் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் எனத் தெரியவருகிறது. முதல் முறையாகப் பாம்புகளில் இருந்து மனிதர்களுக்கு ஒரு வைரஸ் பரவுவது இதுதான் முதல் முறை என்று கருதுகிறோம்''. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;