tamilnadu

img

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 9 பேர் பலி

சீனாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில், லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதன் அளவுகோல் 2.3 ரிக்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, நிலக்கரி சரங்கத்தில் பணியில் இருந்தவர்களில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் சுரங்கப் பணிகள் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாத காலத்துக்குள், சீனாவில் இது  மூன்றாவது சுரங்க விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

;