சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 243 பேர் குணமடைந்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரத்தில் இருந்து இந்த கரோனா வைரஸ் மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவி வருகின்றது. கரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 11,791 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்க சீனா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 243 பேர் குணமடைந்துள்ளதாகவும், கடந்த வெள்ளியன்று மட்டும் 72 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாகவும் சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.