tamilnadu

img

சீன நிறுவனம் உருவாக்கிய ’ஸ்பைடர்மேன் டிரோன்’

சட்ட விரோதமாக இயக்கப்படும் டிரோன்களை தாக்கி பிடிக்கும் ஸ்பைடர்மேன் டிரோனை சீன நிறுவனம் ஒன்று உருவாக்கி உள்ளது.

சீனாவில் ஏரோஸ்பேஸ் அறிவியல் மற்றும் தொழில் நிறுவனம் ஸ்பைடர்மேன் போன்று செயல் திறன் கொண்ட டிரோன் ஒன்றை உருவாக்கி உள்ளது. இவை சட்ட விரோதமாக இயக்கப்படும் டிரோன்களை ஸ்பைடர்மேன் போல் குறிவைத்து,  16 மீட்டர் அளவிலான வலையை அதன் மீது பிடிக்கும் திறன் கொண்டது. சீனாவின் பாதுகாப்பு துறையுடன் இணைந்து இந்த டிரோன்கள், சட்ட விரோதமாக பறக்கும் எதிரி நாட்டு டிரோன்கள் மற்றும் சிறிய விமானங்களையும் குறிவைத்து பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 6 கோணங்கள் கொண்ட இந்த டிரோன்கள் கண்காணிப்பு மற்றும் உளவு பணிக்கும் பயன்படும் என சீனாவின் ராணுவ இணையதளம் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானங்களை எதிர்கொள்ள கூடிய வகையில் எல்ஜே- ஐ என்ற டிரோனை சீனா அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.