tamilnadu

img

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் கதவு திறந்தேயுள்ளது - சீனா

அமெரிக்காவுடனான வர்த்தக போர் குறித்ததான பேச்சுவார்த்தைக்கு சீனா தயாராகவுள்ளது என சீனா தெரிவித்துள்ளது.


கடந்த சில வாரங்களாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. சீனா - அமெரிக்கா வர்த்தகம் தொடர்பாக கடந்த மே மாதம் 10 தேதி நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதன்பின்பு இருநாடுகளும் தனது இறக்குமதி வரியை கூட்டியுள்ளன. இதனால் தற்போதுவரை இருநாடுகளிடையே எந்தவித அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.


இந்நிலையில், அமெரிக்காவுக்கான சீன தூதரான குய் தியன்காய் நேற்று பேசியபோது, அமெரிக்கா ஒரே நாளில் தனது முடிவை பலமுறை மாற்றுகிறது. ஏற்கனவே உள்ள முக்கிய ஒப்பந்தங்களை உடைத்துவிட்டது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தற்போதுவரை தயாராகவே உள்ளது எனவும், எங்கள் கதவு இன்னும் திறக்கப்பட்டு உள்ளது என கூறினார்.