சீனாவில் பள்ளி ஒன்றில் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட கத்தி குத்து சம்பவத்தில் 40 சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் குவாங்சி ஜூவாங் பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப பள்ளி ஒன்றில் காலை 8.30 மணி நேர நிலவரப்படி 50 வயது மதிக்கத்தக்க நபர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 40 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.