சிவகாசி:
எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக பட்டாசுத் தொழில் உள்ளது. இந்த நிலையில், இராஜஸ்தான், தில்லி, ஒடிசா மாநில அரசுகள்பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதித்துள்ளது. இதைக் கண் டித்தும், பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வலியுறுத்தியும் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு)சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி முருகன் காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கே.முருகன், சிஐடியு மாவட்டச்செயலாளர் பி.என்.தேவா, எஸ்.மாடசாமி, மகேஸ்வரி ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.சாத்தூர் முத்தால்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சுந்தரபாண்டியன், மனோஜ்குமார், ஆன்டர் சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.