tamilnadu

img

வ.உ.சி பிறந்த நாள் விழா

 திருச்சிராப்பள்ளி, செப்.5-  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் உள்ள அவரது உருவச்சிலைக்கு வானம் அமைப்பின் சார்பில் கவிஞர் நந்தலாலா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் காளிராஜ், குமர வேல், டாக்டர் திருப்பதி, கவிஞர் நடராஜன், கலைமாமணி இளங்கோ, விவேகானந்தன், பொறியாளர் ரவி, திராவிட கழக வில்வம், எல்ஐசி வெற்றிநிலவன், பெல் சரவணன், கல்யாணராமன், மதிவாணன், இளையபெருமாள், ஓவி யர் கலைச்செல்வன், களஞ்சியம் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.