tamilnadu

img

சிவகங்கை: அரசு மருத்துவமனை மருந்தாளுநர் படுகொலை -ஒருவர் கைது

சிவகங்ககை அரசு மருத்துவமனை மருந்தாளுநர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகங்கையில் இன்று காலை வழக்கம்போல் மருந்தாளுநர் தமிழ்ச்செல்வன் பணிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அருண்குமார் என்பவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென தமிழ்ச்செல்வனை குத்தினார். இந்த தாக்குதலில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அருண்குமாரை கைது செய்துள்ளனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;