tamilnadu

சிவகங்கை, தேனி, திருவில்லிபுத்தூர் முக்கிய செய்திகள்

வேளாண் துறை அதிகாரிகள் மெத்தனத்தால்  சிவகங்கையில் உரத்தட்டுப்பாடு   ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் 
சிவகங்கை அக்31- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மெத்தனத்தால் ஒரு மாதமாக யூரியா தட்டுப்பாடு நீடிக்கிறது. இதனால் நெல் சாகுபடி பணி பாதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 678 பொதுப்பணித்துறை கண்மாய்கள் உட்பட, 4,966 கண்மாய்கள் உள்ளன. இதன்மூலம் சராசரியாக 85 ஆயிரத்து 882 எக்டேர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சில தினங்களாக சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் இந்தாண்டு அதிக மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் நெல் நடவுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.  ஆனால் சிவகங்கை, கல்லல், காளையார்கோவில் , தேவகோட்டை, இளையான்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது.  பெரும்பாலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா இல்லை.  இதை பயன்படுத்தி சிலர் தனியார் உரக்கடைகளில் யூரியாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர். தற்போது அங்கும் கிடைக்காததால் விவசாயிகள் சாகுபடி பணியை நிறுத்தியுள்ளனர்.  வேளாண்மை அதிகாரிகள் உரத்தேவையை சரியாக கணக்கிடாததால் தான் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி நிலவியது. இதனால் பலர் விவசாயம் செய்யவில்லை. ஆனால் இந்தாண்டு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அனைவரும் நெல் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.  இதனால் யூரியா தேவை அதிகரித்துள்ளது. இதை வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணக்கில் எடுக்காமல் கடந்த ஆண்டுகளை போலவே உரத் தேவையை கணக்கிட்டனர். இதனால் கடும் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான அளவு இருப்பு இருப்பதாக கூறுகின்றனர். அங்கு சென்றால் உரம் இல்லை என்று கைவிரிக்கின்றனர். இதனால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிவகங்கை டான்பெட் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  இதுவரை (நேற்று வரை) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 900 டன் யூரியா அனுப்பியுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் மழை பொழிவு இல்லாததால் நெல் சாகுபடி குறைவாக இருந்தது. ஆனால் இந்தாண்டு சாகுபடி அதிகரித்து வருகிறது. அனைவரும் ஒரே சமயத்தில் யூரியா கேட்பதால் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. எங்களுக்கும் குறைவாகவே வந்துள்ளதால் தேவை அதிகமுள்ள கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு யூரிவை அனுப்பி வருகிறோம். யூரியா தட்டுப்பாடு பிரச்சனை ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும், என்றார்.

தேனி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை                                                                                                                                                                                                                                                                                                                                                          தேனி, அக்.31-  தேனி மாவட்டத்தில் செவ்வாய்க் கிழமை மாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து விடிய விடிய மழை கொட்டியது. கனமழை காரணமாக ஏற்கனவே தேனி மாவட்டத்தில் உள்ள வைகை, முல்லைபெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை, உள்ளிட்ட அணை களுக்கு அதிகளவு தண்ணீர் வரத்து இருந்தது.மஞ்சளாறு -3 ஆம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் தொடர் மழையினால் பெரியகுளம் அருகே உள்ள மஞ்ச ளாறு அணை நிரம்பியது. 57 அடி உய ரமுள்ள இந்த அணை நீர்மட்டம் கடந்த 21-ந்தேதி 51 அடியை எட்டியது. இதை யடுத்து அந்த பகுதிக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டது. பின்னர் கடந்த 25-ந்தேதி அணை நீர்மட்டம் 53 அடியை தாண்டியது. இதையடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதியான கொடைக்கானல் பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. அணைக்கு வரும் 552 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதை தொடர்ந்து தேவதானப்பட்டி, வத்த லக்குண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் மஞ்சளாற்று கரையோரம் வசிப்ப வர்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை காலை 8 மணி நில வரப்படி முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 126.60 அடியாக இருந்தது .மாலை 4 மணி நிலவரப்படி 127.35 அடியாக இருந்தது .1460 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1550 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 62.89 அடியாக உள்ளது. 868 கன அடி நீர் வருகிற நிலையில் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1560 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.93 அடியாக உள்ளது. வருகிற 414 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. ஆண்டிபட்டி 28.6, அரண்மனைப் புதூர் 19.8, போடி 8.6, பெரியகுளம் 19.4, பெரியாறு 12.2, தேக்கடி 55, கூட லூர் 22.4, சண்முகாநதி அணை 28, உத்த மபாளையம் 16.1, வீரபாண்டி 28, வைகை அணை 20, மஞ்சளாறு 22, மருதாநதி 19, சோத்துப்பாறை 35, கொடைக்கானல் 67.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக தேனி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவி, கும்பக்கரை அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ள னர். ஆண்டிபட்டி அருகே ராஜகோபா லன்பட்டியில் தொடர்மழை காரணமாக பாண்டி என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.

 திறந்த வெளியில் ஆழ்துளை கிணறு                                                                                                                                                                                                                                                                                                                                                                      திருவில்லிபுத்தூர், அக்.31- திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் திறந்தவெளியில் ஆழ்துளை கிணறு இருப்பதால் பயணி கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்அச்சமும் பயமும் ஏற்பட்டுள்ளது. ஏதாவது அசம்பாவித சம்பவம்நிக ழும் முன் நகராட்சி நிர்வா கத்தினர் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர் மதுரை, திருச்சி, சென்னைக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு இருப்பது பொது மக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்த ஆழ்துளை கிணறு கடந்த 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு உள்ள கழிப்பிடத்திற்கு இங்கிருந்துதான் தண்ணீர் செல்கிறது. திறந்தவெளியில் இருப்பதால் சிறு குழந்தை யின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதை மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்நிலையில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள இந்திரா நகரில்உள்ள வள்ளுவர் நகரில் ஆழ்துளை கிணறு ஒன்று திறந்த நிலையில்உள்ளது. இதுகுறித்து பகுதி குடி யிருப்புவாசிகள் கூறும்போது, திறந்தநிலை ஆழ்துளை கிணறு மிகவும் ஆபத்தானது திறந்த நிலை யில் உள்ள ஆழ்துளை கிணற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.