சிவகங்கை, மார்ச் 5- சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி வழக்கம் போல் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்வு செய்யயப்பட்டனர். இதில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிக எண்ணிக் கையில் வெற்றி பெற்றனர். மேலும் சில சுயேட்சை உறுப்பி னர்களும் திமுக அணியை ஆதரித்து வருகின்றனர். திமுக அணிக்கு 10 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. இதனால் திமுக ஆதரவு அணியைச் சேர்ந்தவர்கள்தான் தலைவர், துணைத் தலைவர் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அதிமுக அணியில் அதிமுக, தமாகா, சுயேட்சைகள் என மொத்தம் ஏழு பேர் உள்ளனர். அதிமுக அணியை வெற்றி பெற வைக்க ஆளும்கட்சியினர் முயல்கின்றனர். இதற்காக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தேர்தலை தேர்தல் அதிகாரிகள் தள்ளிவைத்து வரு கின்றனர்.வழக்கம் போல் மூன்றாவது முறையாக புதனன்றும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.